09 May 2019

ஆறுதல் அடை மனமே

கி.கீ:353

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆறுதல் அடை மனமே

 

353. (339) துஜாவந்தி                                              ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          ஆறுதல் அடை, மனமே;-கிறிஸ்துவுக்குள்

            ஆறுதல் அடை, மனமே.

 

                             அனுபல்லவி

 

                        பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின்

                        கூரை அழித்த யேசு கொற்றவன் றனை நோக்கி. - ஆறு

 

1.         நம்பிக்கை யற்றோரைப் போலே,-மரித்தோர்க்காக

            நலிவதேன் ஒருக்காலே;

            உம்பர்[1] கோன் மேகத்தின் மேலே-தோன்றிடும் போ

            துயிர்த்தெழும்புவ தாலே,

            வெம்பிப் புலம்பி அழ வேண்டாம்; கிறிஸ்து வெனும்

            தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து. - ஆறு

 

2.         ஜீவ நதிகள் ஓடுமே;-எருசலேமில்

            திரளாய் ஜனங்கள் கூடுமே;

            தேவ துதியைப் பாடுமே;-யேசுகிறிஸ்தின்

            ஜெயத்தைச் சொல்லிக் கொண்டாடுமே;

            ஆவலுடனே நாமும் அதையே அடைவதற்கு

            ஜீவ வசனந் தன்னைத் திடனாய்ப் பிடிப்போமாக. - ஆறு

 

3.         எண்ணம் கவலைகள் உண்டாம்;-மரித்தோர்க்காக

            ஏக்கம் பெருமூச்சும் உண்டாம்;

            கண்ணீர் சொரிவதும் உண்டாம்;-துயரம் மிஞ்சிக்

            கலங்கி அழுவதும் உண்டாம்;

            அண்ணல் கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார்,

            நண்ணி அவரை ஜெபம் பண்ணித் துயரைவிட்டு. - ஆறு

 

4.         யேசுவைப் பற்றின பேர்கள்-மரித்தும் உயிர்த்

            தெழுந்து புறப்படுவார்கள்;

            மாசற்ற தேவன் அவர்கள்-உடனிருக்க

            மகிமை பெற்றிருப்பார்கள்;

            பேச வேண்டுமோ? யேசு ராசன் சமுகமதில்

            நேசமுடன் என்றைக்கும் வாசம் செய்வார்கள் அல்லோ? - ஆறு

 

 

- மரியான் உபதேசியார்



[1] வானோர்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...