15 October 2018

நீர் வாரும் கர்த்தாவே


Come Lord and tarry not
Franconia.    Vespers

52                                                                                            S.M.

1.         நீர் வாரும், கர்த்தாவே;
            ராக்காலம் சென்றுபோம்;
            மா அருணோதயம் காணவே
            ஆனந்தம் ஆகுவோம்.

2.         நீர் வாரும் பக்தர்கள்
            களைத்துச் சோர்கின்றார்;
            நல்லாவி மணவாட்டியும்
            'நீர் வாரும்' என்கிறார்.

3.         நீர் வாரும் சிஷ்டியும்
            தான் படும் துன்பத்தால்
            ஏகோபித்தேங்கி ஆவலாய்
            தவித்து நிற்பதால்

4.         நீர் வாரும், ஆண்டவா!
            மாற்றாரைச் சந்திப்பீர்,
            இருப்புக்கோலால் தண்டித்து
            கீழாக்கிப் போடுவீர்.

5.         நீர் வாரும், இயேசுவே,
            பயிர் முதிர்ந்ததே;
            உம் அரிவாளை நீட்டுமேன்
            மா நீதிபரரே.

6.         நீர் வாரும் வையத்தில்
            பேர் வாழ்வை நாட்டுவீர்;
            பாழான பூமி முற்றிலும்
            நீர் புதிதாக்குவீர்.

7.         நீர் வாரும் ராஜாவே,
            பூலோகம் ஆளுவீர்;
            நீங்காத சமாதானத்தின்
            செங்கோல் செலுத்துவீர்.

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...