25 October 2018

இயேசுவே உம்மை சிந்தித்தால்


190. St. Agnes                             C.M.

"Jesus, the very thought of Thee"

1.         யேசுவே,  உம்மை சிந்தித்தால்,
                        என் உள்ளம் கனியும்;
            கண்ணார உம்மைக் காணுங்கால்
                        பேரின்பம் சுரக்கும்.

2.         மானிட மீட்பர் யேசுவின்
                        சீர் நாமம் போலவே,
            இங்கீத நாதம் ஆய்ந்திடின்,
                        உண்டோ இப்பாரிலே?

3.         துன்புற்ற நெஞ்சின் தஞ்சமும்
                        அன்பர்க்கு இன்பும் நீர்,
            கேட்போருக்குச் சால வள்ளலும்
                        பேர் வாழ்வும் தேவரீர்.

4.         கண்டடைந்தோரின் பாகத்தை
                        யார் கூற வல்லவர்?
            உம் தாசர் அல்லால் பேரன்பை
                        யார் ருசி பார்த்தவர்?

5.         யேசுவே, எங்கள் முத்தியும்
                        மகிழ்ச்சியும் நீரே;
            இப்போதும் நித்ய காலமும்
                        நீர் எங்கள் மேன்மையே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...