16 October 2018

தேவாவி மனவாசராய்


128. Wiltshire, Psalmody, - Nox Proecessit                                               C.M.

"Spirit divine, attent our prayers"

1.         தேவாவி, மனவாசராய்
            வந்தனல் மூட்டுவீர்;
            உம் அடியாரின் உள்ளத்தில்
            மா க்ரியை செய்குவீர்.

2.         நீர் ஜோதிபோல் ப்ரகாசித்து
            நிர்ப்பந்த ஸ்திதியும்
            என் கேடும் காட்டி ஜீவனாம்
            மெய்ப்பாதை காண்பியும்.

3.         நீர் வான அக்னிபோலவே
            துர் ஆசை சிந்தையும்
            தீக்குணமும் சுட்டெரிப்பீர்
            பொல்லாத செய்கையும்.

4.         நற் பனிபோலும் இறங்கும்
            இவ்வேற்ற நேரத்தில்;
            செழிப்புண்டாகச் செய்திடும்
            பாழான நிலத்தில்.

5.         புறாவைப் போலச் சாந்தமாய்
            நீர் செட்டை விரிப்பீர்;
            மெய்ச் சமாதானம் ஆறுதல்
            நற் சீரும் அருள்வீர்.

6.         நீர் பெருங் காற்றைப்போலவும்
            வந்தசைத் தருளும்,
            கல் நெஞ்சை மாற்றி பேரன்பை
            நன்குணரச் செய்யும்.

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...