124. St. Peter, Serenity C.M.
"Jesus
the name high over all"
1. பாதாளம்,
விண், மண் யாவிலும்
மேலான யேசுவே,
உமக்கு பேய்க் கணங்களும்
நடுங்குவார்களே.
2. உமது நாமம் பாவிக்கு
ஜீவாமிர் தமாமே;
நான் சொஸ்தமாகும்படிக்கு
சஞ்சீவி அதுவே.
3. சிறையுற்றோரின் விலங்கை
தறித்துப் போடுவீர்;
பெலனற்றோர்க்குப் பெலத்தை
கொடுத்துத் தாங்குவீர்.
4. என் வாழ்வு தாழ்வு சாவிலும்
நான் உம்மைப் பற்றுவேன்;
உம்மால் உண்டான மீட்பையும்
கொண்டாடிப் போற்றுவேன்.
No comments:
Post a Comment