05 October 2018

கண்டீர்களோ சிலுவையில்


73. St. Mary                                                                            C.M.

"The death of Christ"

1.          கண்டீர்களோ சிலுவையில்
                        மரிக்கும் யேசுவை?
            கண்டீர்களோ காயங்களில்
                        சொரியும் ரத்தத்தை?

2.         “மன்னியும்” என்ற வேண்டலை
                        கேட்டீர்களே, ஐயோ!
            “ஏன் கைவிட்டீர்” என்றார், அதை
                        மறக்கக்கூடுமோ?

3.         கண்மூடி, தலை சாயவே,
                        “முடிந்தது” என்றார்;
            இவ்வாறு லோக மீட்பையே
                        அன்பாய் உண்டாக்கினார்.

4.         அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
                        ஈடேற்றம் வந்ததே;
            ஆ! பாவி, இதை நோக்குங்கால்
                        உன் தோஷம் தீருமே.

5.         சீர் கெட்டு மாண்டு போகையில்
                        பார்த்தேன் என் மீட்பரை;
            கண்டேன், கண்டேன் சிலுவையில்
                        மரிக்கும் யேசுவை!

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...