06 October 2018

வைகறை இருக்கையில்


84. Maidstone                                                                        7, 8l,

"Mary to the Saviour's tomb"

1.         வைகறை இருக்கையில்
            ஓடி வந்த மரியாள்
            கல்லறையின் அருகில்
            கண்ணீர் விட்டு அழுதாள்
            “என்தன் நாதர் எங்கேயோ?
            அவர் தேகம் இல்லையே!
            கொண்டுபோனவர் யாரோ?”
            என்று ஏங்கி நின்றாளே.

2.         இவ்வாறேங்கி நிற்கையில்,
            யேசு, “மரியாள்” என்றார்
            துக்கங்கொண்ட நெஞ்சத்தில்
            பூரிப்பை உண்டாக்கினார்
            தேவ வாக்கு ஜீவனாம்,
            தேவநேசம் மோட்சமே;
            சுத்த சிந்தையோர் எல்லாம்
            காட்சி பெற்று வாழ்வாரே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...