18 October 2018

தேவாவியால் இரக்கமாய்


142. London New, Evan                  (397)   C.M.

"How precious is the Book divine"

1.         தேவாவியால் இரக்கமாய்
                        உண்டான வேதமே
            உயர்ந்த ஞானமுள்ளதாய்
                        அருளப்பட்டதே.

2.         அதில் பிறந்த போதனை
                        விளக்கைப் போலவே
            கதிக்குப் போகும் மார்க்கத்தை
                        விளக்கிக் காட்டுமே.

3.         இருள் நிறைந்த பூமியில்
                        அதே நடத்துமே;
            பரத்தை நோக்கிப் போகையில்
                        நட்சத்திரம்போல் ஆமே.

4.         இவ்வருள் வேதம் தந்ததால்
                        கர்த்தாவே, உமக்கே
            எந்நாளும் சர்வ சபையால்
                        புகழ் உண்டாகுமே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...