நன்மைகளை ஏராளமாய் செய்தவருக்கு

நன்மைகளை ஏராளமாய் செய்தவருக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          நன்மைகளை ஏராளமாய் செய்தவருக்கு

            நன்றி சொல்லி பாட வந்தோம்

            கிருபைகள் தாராளமாய் தந்தவருக்கு

            துதி பலி செலுத்துகிறோம்

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூ அல்லேலூயா

                        அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூ அல்லேலூயா

 

1.         சிறுமையும் எளிமையும் ஆன என்னை

            மேன்மையாக வைக்கிறீர்

            ஏழையின் கோலமாய் பிறந்த என்னை

            உம் ஐஸ்வர்யத்தால் நிரப்பினீர் - அல்லேலூயா

 

2.         உமக்காக என்னையும் தெரிந்துக் கொண்டு

            உம் பிள்ளையாய் மாற்றினீரே

            உண்மையுள்ளவன் என்று சொல்லி

            உம் ஊழியத்தை தந்தீரே - அல்லேலூயா

 

3.         உள்ளங்கையில் என்னை வரைந்துக் கொண்டு

            தினம் என்னைக் காண்கிறீர்

            கழுகுபோல என்னைச் சுமந்துக் கொண்டு

            கன்மலை மேல் நிறுத்துகிறீர் - அல்லேலூயா

 

4.         என் துக்கம் எல்லாம் சந்தோசமாய்

            என்றென்றும் மாற்றுகிறீர்

            நீதியின் கரத்தால் என்னை மூடி

            நீதிமானாய் மாற்றினீர் - அல்லேலூயா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு