கர்த்தர் எந்தன் மேய்ப்பர்

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    கர்த்தர் எந்தன் மேய்ப்பர்

                        எனக்கொன்றும் குறைவில்லை

                        பத்திரமாய் என்னைக் காப்பார்

                        அவரின்றி ஒருவரில்லை

 

1.         பசுமை நிறைந்த புல்லில் நிதம் என்னை போஷித்து

            அமர்ந்த நீரூற்றண்டை அவர் என்னை சேர்ப்பித்து

            சேதமின்றி ஆத்துமத்தை

            நித்தியமான நீதியின் பாதையில் என்றும் நடத்திடுவார்

 

2.         சாவின் கோர சேதம் நான் கண்டு அஞ்சேனே

            தேவன் வல்ல பாதம் என்றென்றும் தஞ்சமே

            ஜீவபரன் என்னோடிருப்பார்

            அவர்தம் கோலும் அவர்தம் தடியும் என்னைத் தேற்றும்

 

3.         பகைவர் முன்னே என்னை அவர் மேன்மை படுத்தி

            நிகரில்லாத தைலம்பூசி என்னை உயர்த்தி

            சாகும்வரை நன்மை தொடர

            ஏசுதேவன் வீட்டில் நெடுநாள் நிலைத்திருப்பேன்

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு