வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள் படிப்பார்

வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள் படிப்பார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

பெத்லகேம் குறவஞ்சி

 

                    தினதேந்தினத் தினதேந்தினத் தினதேந்தினத் தின்னா

                    தெந்தேந்தினத் தெந்தேந்தினத் தெந்தேந்தினத் தினனா

 

1.         வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள் படிப்பார்

            வன்மையுள்ள சித்தரெல்லா மருந்தவங்கள் பிடிப்பார்

            ஞானமுடன் முல்லைநிலத் தலைவர்வந்து தொழுவார்

            நட்சேத்திரச் சாஸ்திரிகள் காணிக்கைகள் தருவார்

            தானதர்ம மேழைகட்கு யாவர்களும் கொடுப்பார்

            சண்டாளப் பாவமெல்லா மண்டாது தடுப்பார்

            ரீனமுள்ள பேய்க்கணங்கள் மயங்கியங்கே துடிப்பார்

            ரேகன்மனு வானவெல்லை யெங்கள் மலையம்மே.

 

2.         ஆதிமலையெங்களுக்கோ ஏதன் மலையம்மே

            ஆண்டவனார் ரெங்களைத்தா னமைத்த மலையம்மே

            நீதியென்ற நால்வரமுங் கொடுத்தமலையம்மே

            நித்தியமும் சாகாம னின்றமலையம்மே

            சாதனையாய்ப் பேய்பிறகு கெடுத்தமலையம்மே

            தற்பரனா ரெம்மையங்கே சபித்தமலையம்மே

            பேதகமாய் நாங்களதை விட்டதற் பின்னம்மே

            பெத்தலேக மெங்களுக்குப் பெரியமலையம்மே.

 

3.         எங்கள் குலம் ஞானமிகுங் குறவர்குலமம்மே

            யெங்களுக்குச் சரிகுலங்க ளெங்குமில்லையம்மே

            பின்குலத்திற் பெண்கள்கொடோம் பெண்களையும் கொள்ளோம் பேசுதற்கு         கெங்கள்குலம் ராசகுலமம்மே

            மங்களகஞ்சேர் தீட்சைபெற்றோர்க்

            கெங்கள் பெண்ணைக் கொடுப்போம்

            மாறாட்டக் காரருக்கு வீராப்பாய்திரிவோம்

            புங்கமுடன் கிறிஸ்தவர்க்கு மலைகளெல்லாங் கொடுப்போம்

            புகழ்பெறுபெத் லேகமெங்கள் புதுமைமலையம்மே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

 

 

பொருள்

 

1. வான் தூதர்கள் ஒன்றுசேர்ந்து போற்றிப் பாடுவார்கள், சக்தி மிகுந்த முனிவரெல்லாம் பெரும் தவங்களில் ஈடுபடுவார்கள், முல்லை. நிலத்தின் தலைவர்கள் வந்து ஞானத்துடன் வழிபடுவார்கள். காணிக்கைகளைப் உதவிகள் தூர இடங்களிலிருந்து ஞாவிகள் வந்து படைப்பார்கள், எல்லா செய்து, மிகக்கடுமையான ஏழைகளுக்கும் பாவங்கள் எல்லாம் சேர்ந்திடாமல் தடுத்துவிடுவார்கள். தீய பேய்க்கூட்டங்கள் மயங்கி விழுந்து துடிப்பார்கள். ஒரே இறைவன் மனிதரான சிறப்பினை உடையது எங்கள் மலை அம்மா.

 

2. எங்களுக்கு அமைத்துக் கொடுத்த முதல்மலை, ஏதேன் மலை, நீதி என்கின்ற நல்ல வரத்தைக் கொடுத்த மலை அதுதான், இறந்து போகாமல் நிலைத்து நிற்கும் மலை அது. கடவுளுக்கு எதிரான சக்திகள் தங்கள் சாதனையாக கெடுத்துப் போட்ட மலையும் அதுதான், அந்த மலையில்தான் தாமே உயர்ந்தவராக இருக்கும் ஆண்டவர் எங்களைச் சபித்தார், அறிவில்லாமல் அந்த மலையை விட்டு வெளியேறியபின், எங்கள் பெரிய மலையாக பெத்தலகேம் எங்களுக்காகிவிட்டது அம்மா.

 

3. எங்கள் இனம் அறிவில் சிறந்த குறிஞ்சி நில இனம். எங்களுக்கு இணையான இனங்கள் வேறு எங்கும் கிடையாது. எங்களுக்குக் கீழான இனங்களுக்கு பெண்களை எடுக்கவும் மாட்டோம். கொடுக்கவும் மாட்டோம், நாங்கள் ராஜ குலத்து இனம். பொலிவுமிக்க சமய தகுதி உடையவர்க்கு மட்டுமே எங்கள் பெண்களை திருமணம் செய்து கொடுப்போம். இரண்டுமனம் கொண்டோரைப் பார்த்தால் நாங்கள் உறுதியாக மறுத்திடுவோம். உயர்வான கிறிஸ்தவருக்கு எங்கள் மலைகளைக்கொடுப்போம் புகழ்பெற்ற புதுமையான பெத்தலகேமே எங்கள் மலை அம்மா'

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு