இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
ஓ...
ஓசன்னா
ஓ...
ஓசன்னா
தாவீதின் மைந்தனுக்கு
ஓசன்னா
என்னில்
பவனி வாருமேன்
உம்மை நான்
சுமப்பேனே
1. வருகிறார்
தேவ மைந்தனாய்
வருகிறார்
எருசலேம்
வீதியில்
விண்ணையும்
மண்ணையும் படைத்தவர்
மறியின் மேல்
ஏறி வருகிறார்
2. பவனியாய் இயேசு
போகிறார்
தன்னை
சிலுவையில் பலியாக்க
என்தன் பாவம்
போக்கவே
கல்வாரி
நோக்கி போகிறார்
3. ஆலயம்
நோக்கி செல்கிறார்
அவலம் கண்டு
சினம் கொள்கிறார்
சுத்திகரிப்பின்
நாயகன்
என்
உள்ளம் சுத்தி
செய்வீரே
4. இயேசுவே
என்னில் வாருமே
தூயாவியால்
என்னை நிரப்புமே
உமக்காய்
நான் என்றும் வாழ்ந்திட
என்னை
உமக்கு தருகிறேன்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment