இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
என்
இயேசு ராஜாவுக்கே
எந்நாளும்
ஸ்தோத்திரம்
என்னோடு
வாழ்பவர்க்கே
எந்நாளும்
ஸ்தோத்திரம்
1. கர்த்தாவே
நீர் செய்த நன்மைகளை
நித்தமும்
நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு
உம் நாமம்
பாடிப்
புகழுவேன்
- நான்
2. நெருக்கப்பட்டேன்
தள்ளப்பட்டேன்
நேசர் நீர்
அணைத்தீரே
கைவிடப்பட்டு
கதறினேன்
கர்த்தர்
நீர் தேற்றினீர்...
ஆ ... ஆ
3. இனி நான்
வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை
எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல்
பாடுவேன் - நான்
4. பாவங்கள்
அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை
சுகமாக்கினீர்
எனது ஜீவனை அழிவில்
நின்று
காத்து
இரட்சித்தீரே...ஆ
...ஆ
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment