இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
உசிரே உசிரே
உசிரா பிறந்த
இயேசுவே
என்னுயிரே இங்கு
பாசமாய் பிறந்தவரே
உறவே உறவே
உறவே உறவா பிறந்த
இயேசுவே
நல்லுறவே புது
நேசமாய் மலர்ந்தவரே
பொன்னான
நேரம் நீ இங்க
பிறந்த
அன்பான
தேவா என் கண்ணில்
தெரிந்த
சின்ன
இயேசு பாலா
உன்னை
என்ன சொல்லி பாடுவேன்
வண்ண
வண்ண பூக்கள் தூவி
ஆனந்தமாய்
பாடுவேன்
1. சேற்று
மேலே நாத்து போல
எட்டிப்
பார்த்து சிரிச்ச
காத்து
போல ஊத்து போல
நெஞ்சிக்குள்ள
உதிச்ச
பச்சக்கிளி
பேச்சப்போல
செய்தி
சொல்ல பிறந்த
தேடிவந்த
கோடிஜனம்
வாழ்வு
பெற பிறந்த
எல்லார்க்கும்
எல்லமும் கிடைத்திடுமே
இனி நம்
வாழ்வு நல்வாழ்வாய்
விடிஞ்சிடுமே
நல்லதெல்லாம்
பூமியிலே நடந்திடுமே
இங்கு தெய்வமே
மனிதனாய் பிறந்திருக்கே
2. தாய் மண்ணே
தமிழ் மண்ணே
தப்பாட்டம்
ஆடு
மானாட்டம்
மயிலாட்டம்
தப்பாமல்
ஆடு
மகராசன்
மனசுக்குள்ள
பிறந்ததையே
பாடு
ஒருபோதும்
மறக்காத தெய்வத்தையே
பாடு
சாதி மத
பேதம் எல்லாம்
மறைந்திடுமே
இனி நல்ல
காலம் நமக்கெல்லாம்
விடிஞ்சிடுமே
மனிதநேயம்
பூவாக மளர்ந்திடுமே
இங்கே மனிதனாய்
தெய்வமே பிறந்திருக்கே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment