18 May 2019

பாவி கேள் உன் ஆண்டவர்


49.     "Hark! my soul, it is the Lord!"         7's     (365)

1.         பாவி! கேள்! உன் ஆண்டவர்,
            அறையுண்ட ரட்சகர்
            கேட்கிறார், "என் மகனே,
            அன்புண்டோ என் பேரிலே?"

2.         “நீக்கினேன் உன் குற்றத்தை,
            கட்டினேன் உன் காயத்தை,
            தேடிப்பார்த்து ரக்ஷித்தேன்,
            ஒளி வீசப்பண்ணினேன்”.

3.         “தாயின் மிக்க பாசமும்
            ஆபத்தாலே குன்றினும்
            குன்றமாட்டா தென்றுமே
            ஒப்பில்லா என் நேசமே.”

4.         “எனதன்பின் பெருக்கும்
            ஆழம் நீளம் உயரமும்
            சொல்லி முடியாது, பார்!
            என்னைப் போன்ற நேசன் ஆர்?”

5.         “திவ்ய ரூபம் தரிப்பாய்,
            என்னோ டரசாளுவாய்
            ஆதலால் சொல் மகனே!
            அன்புண்டோ என் பேரிலே!”

6.         “யேசுவே! என் பக்தியும்
            அன்பும் சொற்பமாயினும்,
            உம்மையே நான் பற்றினேன்;
            அன்பின் ஸ்வாலை ஏற்றுமேன்!”

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...