பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு

பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பூமியின் குடிகளே

 

373. (76L) சங்கராபரணம்                         ஆதி தாளம்

 

                             பல்லவி

 

            பூமியின் குடிகளே, நீர் தாமதமிலாதியேசு

            சாமியினன்னாமமதிலே மகிழுவீர்.

 

                             அனுபல்லவி

 

            ஓமனாதி[1] யந்தபரனே மனுடரான நம்மை

            உருக்கமாய்த் - தங்கருணைப்

            பெருக்கமாய் - மீட்டரணாந்

            துருக்கமாய் - இதுவரைக்கும்

            நெருக்கமாய் - ஊக்கமாய்நின்றார் - பூமி

 

                             சரணங்கள்

 

1.         தந்தையார் தமதுநேச மைந்தனைப் பாதகர்க்காகத்

            தந்துமா நிர்பந்தமற விந்தையாகவே,

            இந்த நீசமான பூலோகந்தனை மீட்ட நேசத்தைச்

            சிந்தைல் நினைந்து முழு நன்றியாகவே,

            சந்ததமுமே துதிப்ப தந்தமான வேலையல்லோ?

                        தாசரே - யேசுநாதர்

                        நேசரே, - எருசலேம்

                        வாசரே, - கர்த்தருக்குள்ளாம்

                        ராசரே, - ஆசாரிமாரே! - பூமி

 

2.         கர்த்தனார் ஒருவரே நம் நித்திய பரமனென்ற

            சத்தியத்தை எத்தினமும் உற்றுணர்வீர்;

            அத்தனார் படைப்புகளைப் புத்தியற்றுத் தெய்வமெனச்

            சொற்றவரே விக்கிரகப் பத்தியகல்வீர்;

            இத்தரையில் நாங்களல்ல உத்தபரன்[2] எங்களைக் கண்

                        ணோக்கினார், - எங்கள்வம்

                        போக்கினார், - சகலதுன்பம்

                        நீக்கினார், - தமதுமந்தை

                        ஆக்கினார், - தூக்கினாரென்று - பூமி

 

3.         ஜீவபரன் வாசல்களில் மேவி எய்துவோம் துதியோ

            டாவியுடனே நமது நாவுமிசைந்து

            தேவ பிரகாரங்களிலே வருவோமே, புகழ்ச்சி

            மாவுரிமை யோடுரைத்துக் கூவி மகிழ்ந்து

            பாவலர் மற்றோரேநல்ல நாவலரே கர்த்தர்வீட்டுக்

                        கோடுவோம், - அவர்நாமத்தில்

                        கூடுவோம், - அவர்பதத்தை

                        நாடுவோம், - அவர்மகிமை

                        தேடுவோம், - பாடுவோம் துதி - பூமி

 

4.         வல்ல பரனானவர் மா நல்லவர் அவர் கிருபை

            உள்ள தூழி ஊழிகாலம், தொல்லையுண்டுமோ?

            சொல்லரும் அவரதுண்மை யுள்ளதே தலைமுறைகள்

            எல்லாவற்றிலு மெங்களுக்கல்லலண்டுமோ?

            புல்லனாம் பேயினரசே யில்லையெனுமட்டும் காளம்[3]

                        பிடிக்கிறோம், - சத்தியத்தைப்

                        படிக்கிறோம், - பேயரங்கம்

                        இடிக்கிறோம், - அவனையெங்கும்

                        அடிக்கிறோம், - சீக்கிரம் ஜெயம் - பூமி

 

 

- ஞா. சாமுவேல்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] ஆதி ஒலி (திருவார்த்தை)

[2] நல்ல இறைவன்

[3] எக்காளம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே