பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு
பூமியின்
குடிகளே
373. (76L) சங்கராபரணம் ஆதி தாளம்
பல்லவி
பூமியின்
குடிகளே, நீர்
தாமதமிலாதியேசு
சாமியினன்னாமமதிலே
மகிழுவீர்.
அனுபல்லவி
ஓமனாதி[1] யந்தபரனே மனுடரான நம்மை
உருக்கமாய்த்
- தங்கருணைப்
பெருக்கமாய்
- மீட்டரணாந்
துருக்கமாய்
- இதுவரைக்கும்
நெருக்கமாய்
- ஊக்கமாய்நின்றார்
- பூமி
சரணங்கள்
1. தந்தையார்
தமதுநேச மைந்தனைப்
பாதகர்க்காகத்
தந்துமா
நிர்பந்தமற
விந்தையாகவே,
இந்த நீசமான பூலோகந்தனை
மீட்ட நேசத்தைச்
சிந்தைல்
நினைந்து
முழு நன்றியாகவே,
சந்ததமுமே
துதிப்ப தந்தமான வேலையல்லோ?
தாசரே
- யேசுநாதர்
நேசரே,
- எருசலேம்
வாசரே,
- கர்த்தருக்குள்ளாம்
ராசரே,
- ஆசாரிமாரே!
- பூமி
2. கர்த்தனார்
ஒருவரே நம் நித்திய
பரமனென்ற
சத்தியத்தை
எத்தினமும்
உற்றுணர்வீர்;
அத்தனார்
படைப்புகளைப்
புத்தியற்றுத்
தெய்வமெனச்
சொற்றவரே
விக்கிரகப்
பத்தியகல்வீர்;
இத்தரையில்
நாங்களல்ல
உத்தபரன்[2] எங்களைக்
கண்
ணோக்கினார்,
- எங்கள்வம்
போக்கினார்,
- சகலதுன்பம்
நீக்கினார்,
- தமதுமந்தை
ஆக்கினார்,
- தூக்கினாரென்று
- பூமி
3. ஜீவபரன்
வாசல்களில் மேவி எய்துவோம்
துதியோ
டாவியுடனே
நமது நாவுமிசைந்து
தேவ பிரகாரங்களிலே
வருவோமே, புகழ்ச்சி
மாவுரிமை
யோடுரைத்துக்
கூவி மகிழ்ந்து
பாவலர்
மற்றோரேநல்ல
நாவலரே கர்த்தர்வீட்டுக்
கோடுவோம்,
- அவர்நாமத்தில்
கூடுவோம்,
- அவர்பதத்தை
நாடுவோம்,
- அவர்மகிமை
தேடுவோம்,
- பாடுவோம் துதி
- பூமி
4. வல்ல பரனானவர் மா
நல்லவர் அவர் கிருபை
உள்ள தூழி ஊழிகாலம்,
தொல்லையுண்டுமோ?
சொல்லரும்
அவரதுண்மை
யுள்ளதே தலைமுறைகள்
எல்லாவற்றிலு
மெங்களுக்கல்லலண்டுமோ?
புல்லனாம்
பேயினரசே
யில்லையெனுமட்டும்
காளம்[3]
பிடிக்கிறோம்,
- சத்தியத்தைப்
படிக்கிறோம்,
- பேயரங்கம்
இடிக்கிறோம்,
- அவனையெங்கும்
அடிக்கிறோம்,
- சீக்கிரம் ஜெயம்
- பூமி
- ஞா.
சாமுவேல்
Comments
Post a Comment