15. 'With
harps and with vials there stand a great throng!' (1023)
1. மேலோகத்திலுள்ள
மா சேனையார் யார்?
ஜெய கீதத்தைப் பாடிக் கெம்பீரிக்கிறார்.
பல்லவி
பாவ நாசகரான மா நேசருக்கே
சர்வ மகிமை மேன்மையும் உரியதே.
2. ஓர் காலத்தில் தீயரானாலுமே, பார்!
தூய தன்மையராகிச் சந்தோஷிக்கிறார்.
3. நல் மீட்பர் இவ்வாறு மா நன்மை செய்தார்
தேவ த்ரோகியை ரக்ஷித் திவ்வாழ்வைத் தந்தார்.
4. மா நேசர் இவ்வருள் செய்யாதே போனால்
கெடுவோமே! அநாதராய்ப் பாவத்தினால்.
5. ஏகோபித் தாராதிப்போம் மாட்சிமையாய்
அருள் நாதரைப் போற்றுவோம் மகிழ்ச்சியாய்.
No comments:
Post a Comment