06 May 2019

ஒருபோதும் மறவாத உண்மைப்


உனக்கென்ன குறை மகனே?

341. (33 L.) புன்னாகவராளி                                       சாபு தாளம்

பல்லவி

            ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
            உனக்கென்ன குறை மகனே?

அனுபல்லவி

            சிறுவந்தொட்டுனை யொரு
            செல்லப் பிள்ளைபோற் காத்த
            உரிமைத் தந்தை யென்றென்றும்
            உயிரோடிப்பாருன்னை. - ஒரு

சரணங்கள்

1.         கப்பலினடித் தட்டில்-களைப்புடன் தூங்குவார்,
            கதறுமுன் சத்தங்கேட்டால்-கடல் புசலமர்த்துவார்,
            எப்பெரிய போரிலும்-ஏற்ற ஆயுதமீவார்,
            ஏழைப்பிள்ளை உனக்கு-ஏற்ற தந்தை நானென்பார். - ஒரு

2.         கடல் தனக் கதிகாரி-கர்த்தரென் றறிவாயே,
            கடவாதிருக்க வெல்லை-கற்பித்தாரவர்சேயே.
            விடுவாளோ பிள்ளையத் தாய்-மேதினியிற்றனியே?
            மெய்ப் பரனை நீ தினம்-விசுவாசித்திருப்பாயே. - ஒரு

3.         உன்னாசை விசுவாசம்-ஜெபமும் வீணாகுமா?
            உறக்க மில்லாதவர் கண்-உன்னைவிட் டொழியுமா?
            இந்நில மீதிலுனக்-கென்னவந்தாலும் சும்மா
            இருக்குமா அவர்மனம்? - உருக்கமில்லாதே போமா? - ஒரு

4.         உலகப் பேயுடலாசை-உன்னை மோசம் செய்யாது,
            ஊக்கம் விடாதே திரு-வுளமுனை மறவாது,
            இலகும் பரிசுத்தாவி-எழில் வரம் ஒழியாது,
            என்றும் மாறாத நண்பன்-இரட்சகருடன் சேர்ந்து. - ஒரு

- ச. முத்துசாமி

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...