25. 'Be
glad in the Lord and rejoice! (207)
1. ஏகோபித்துச்
சேருங்களேன்
கர்த்தாவில் ஆனந்திக்கவும்,
விசாரம் விட்டோங்களேன்
கெம்பீரித் தாராதிக்கவும்.
பல்லவி
செய்வோம்! செய்வோம்!
திரியேகரைத் துதிசெய்வோம்!
2. பராபரன் மெய்வஸ்துவாம்
தயாபரர் ஆண்டவரே
வந்தார் வையகத்திலேயாம்!
இரட்சிக்க வல்லவரே.
செய்வோம்! செய்வோம்!
3. பிசாசின் உபாயங்களால்
பயங்கர மோசமுண்டாம்
ஆனாலும் தேவாவியினால்
ஒத்தாசையும் ஜெயமுமாம்.
செய்வோம்! செய்வோம்!
4. தரித்திரமே யாயினும்
சந்தோஷம் விடாதிருப்போம்.
மா கல்வி இல்லாவிடினும்
ஓயாமல் ஸ்தோத்திரிப்போம்!
செய்வோம்! செய்வோம்!
5. ஏகோபித்துப் பாடுங்களேன்
மகோற்ச வானந்தத்தினால்,
த்ரியேகரைப் போற்றுங்களேன்.
கெம்பீர சங்கீதத்தினால்.
செய்வோம்! செய்வோம்!
No comments:
Post a Comment