26. 'Why
do you wait dear brother' (351)
1. பாவம்
தீராததென்ன?
ஓ! தாமதம் பண்ணுவானேன்?
தயாபரர் நித்திய ஜீவன்
ஈவாரே, சந்தேகிப்பானேன்?
பல்லவி
வாவேன்! வாவேன்!
வாவேன்! இச்சணமே!
2. உணர்வில்லாத தென்ன?
பயங்கர மோசமுண்டாம்.
இயேசுவினாலே யல்லாமல்
விமோசனமே யில்லையாம்.
3. சுத்தமில்லாத தென்ன?
மா திவ்ய ஸ்நானமுண்டே!
உன் பாவம் நிவாரணமாகும்
சமூலம் இந்நேரத்திலே.
4. குணப்படாத தென்ன?
ரட்சண்ய நல் நாளிதுவே!
ராக்காலம் சமீபித்துவர
மா மோசமும் சாவுமுண்டே.
No comments:
Post a Comment