வானோர் பூவோர் கொண்டாட

வானோர் பூவோர் கொண்டாட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             உயிர்த்த காட்சி

 

386. (383) பியாகு                                   ஆதி தாளம்

 

                             பல்லவி

 

                        வானோர் பூவோர் கொண்டாட

                        மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே.

 

                             அனுபல்லவி

 

            தீனதயாளன் திருமறைநூலன்,

            திரிபுவனங்களாள் செங்கோலன்,

            ஞானசு சீலன் நரரனுகூலன்,

            நடுவிடவே வருபூபாலன் - வானோர்

 

                             சரணங்கள்

 

1.         அலகையை[1] ஜெயித்தார், அருள்மறை முடித்தார்,

            அருமலர்க்கா காவலை யொழிந்தார்;

            நிலைதிரை கிழித்தார், தடைச்சுவரித்தார்,

            நேராய்த் தரிசனந்தர விடுத்தார். - வானோர்

 

2.         செத்தோ ருயிர்த்தார், திருநகர் பூத்தார்,

            தேடற் கரியதோர் காட்சிவைத்தார்,

            மற்றோர் பார்த்தார், மலைவுகள் தீர்த்தார்,

            மரித்தார் முதற்பலனாய்ச் செழித்தார். - வானோர்

 

3.         அடியவர் கண்டார், ஆர்துயர் விண்டார்,

            அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்,

            மடமையகன்றார், மயக்கமே கொன்றார்,

            வானானந்தமே மனங்கொண்டார். - வானோர்

 

4.         மகதலானாளு மதி சூசன்னாளும்,

            மயங்கியெழுதயோ வன்னாளும்,

            மகவிருவர் தருசா லொமித்தாயும்

            மரை மலரடிதொழு தேத்தினரே. - வானோர்

 

5.         எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா

            இலதுபதின் மருக்குமே காட்சி

            நன் மனதுடனே பதினொருவருக்கும்

            நடுவகத்தே வருமாசூட்சி - வானோர்

 

6.         மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும்

            மகத்துவத்தே தரிசன மளித்தார்;

            பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும்

            பிரத்தியேகத்தில் தரிசித்தனரே. - வானோர்

 

7.         கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்;

            காட்சி மலையஞ் ஞூறுபேர் பார்த்தார்;

            உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்;

            ஒலிவ மலைமேல் திரள்பேர் பார்த்தார். - வானோர்

 

 

- ஜி.எஸ். வேதநாயகம்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] பிசாசை

Comments

Post a Comment

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே