05 October 2018

கர்த்தாவே மாந்தர் தந்தையே


Dear Lord and Father of mankind
Nicolaus (Lobt Gott)

20                                                                             8, 6, 8, 8, 6

             கர்த்தாவே மாந்தர் தந்தையே,
                        பேதையோர் பொறுப்பீர்,
            சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே,
            பக்தோராய்ச் சேவை செய்துமே
                        பணிந்து போற்றிட.

2.         நன்னாதர் அன்பின் அழைப்பை
                        தட்டாமல் நம்பியே,
            பன்னிரு சீஷர்தாம் உம்மை
            பின்சென்ற வண்ணம் நாங்களும்
                        பின் செல்லச் செய்வீரே.

3.         மா கலிலேயா ஓய்வினில்
                        அமைதி குன்றின்மேல்,
            ஓயாதமைதி ஸ்தலத்தில்
            ஆ இயேசு நாதா, ஜெபத்தில்
                        அன்பாக அமர்ந்தீர்.

4.         உம் சாந்த ஆவி ஊற்றிடும்
                        எம் உள்ள கோஷ்டத்தில்
            உளம் வருத்தும் தொல்லையே
            ஒழிந்திட உம் சாந்தியே
                        உள் வாழ்க்கை ஊன்றிட.

5.         அலைக்கழிக்கும் ஆசையை
                        அடக்கும் ஆவியால்,
            மா காற்று கம்பம் அக்கினியில்
            ஆ ஆற்றும் மென்மைச் சத்தமே
                        அடியார் கேட்கட்டும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...