அருட்கடலே வரந் தர இது சமயமே


வரந் தர இது சமயமே

313. (312) தன்யாசி                              ஆதி தாளம் 
பல்லவி

                   அருட்கடலே, வரந் தர இது சமயமே;
                   ஐயனே, அருள் தாரும்.

சரணங்கள்

1.         சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே,
            கரங்களில் தாசனைக் காத்திடும், தேவா. - அருட்

2.         பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே,
            உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க. - அருட்

3.         அன்போடு யேசுவை ஆவியோடு பேச,
            இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய. - அருட்

4.         திரியேக தேவா, திருச்சபை பெருக,
            அறிவுட னாளும் அன்பர் கோனாக. - அருட்

5.         அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா,
            சந்ததம் வாழ, சபைகளுஞ் செழிக்க. - அருட்

- யே.சா. டெய்லர்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே