உன்னத தேவன்
இன்று இந்த உலகை
மீட்க வந்தார்
நமது
பாவம் தீர்க்க
ஏழை மனிதனாக பிறந்தார்
1. உனக்கும்
எனக்கும் இன்று
புது வாழ்வு வந்தது
உள்ளம்
இல்லம் இரண்டும்
இன்று புனிதமானது
தேவன் தந்த
அமைதி நெஞ்சில்
பாடலானது
தேடி வந்த
இதயங்களில் ஒளி
பிறந்தது
2. மனதின்
கவலை யாவும் இங்கு
மறைந்து போனது
திருமறையின்
வரிகள் வழிகளாக
அழைத்துச் சென்றது
தேவன் சிந்தும்
கருணை மழையில்
ஜீவன் நனைந்தது
பாவம் என்னும்
சகதி முற்றும்
தூய்மையானது
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment