ஆர் இவர்
ஆராரோ
பிறந்த மானிடர் இவர் யாரோ
புவி மீதினிலே சமாதானத்தை
தந்தவர் இவர்தானோ
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆமென் - 2
1. அன்றொரு இராவினிலே
மேய்ப்பர்கள் செய்தியை கேட்டனரே
விரைந்து சென்றனரே
இயேசு பாலனை பணிந்தனரே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆமென் - 2
2. ஞானிகள் விரைந்தனரே
இயேசு பாலனை கண்டனரே
பணிந்து வணங்கினரே
பொன் வெள்ளியை படைத்தனரே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆமென் - 2
3. இரட்சிப்பு தந்திடவே
இயேசு இரட்சகர் உதித்தாரே
மரணத்தை ஜெயித்திடவே
ஜெய வேந்தர் பிறந்தாரே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் - 2
No comments:
Post a Comment