இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
புறப்படப்போகுது
வண்டி இப்போ
புறப்படப்போகுது
வண்டி
வண்டி
ஓட்டுனர் ஆவியானவர்
வண்டி
நடத்துனர் இயேசுவானவர்
1. எக்காளம்
என்னும் விசில்
அடித்தால்
நிக்காமல்
போய்விடும் வண்டி
ஏறல்
ஆயத்தம் இல்லையென்றால்
நம்மை ஏமாற்றிப்
போய்விடும் வண்டி
2. பரிசுத்தம்
என்னும் டிக்கெட்
இருந்தால்
பயமில்லாமல்
பயணம் போகலாம்
பரலோகம்
என்னும் ஊரினிலே
பரவசமாக
இறங்கிடலாம்
3. பாவத்தோடே
பயணம் செய்தால்
பரமன் இயேசு
பார்த்திடுவார்
பாதியில்
வண்டியை நிறுத்திடுவார்
பாதாள சேற்றினில்
இறக்கிடுவார்
4. கர்த்தருக்குள்ளே
இருப்பவரெல்லாம்
கைகளை ஆட்டிச் சென்றிடுவார்
அவர் (இயேசு)
காட்டிய வழியை
மறந்தவரெல்லாம்
கைகளை மார்பில்
அடித்துக் கொள்வார்
5. மரித்துப்போன
பரிசுத்தவான்கள்
எழுந்த
முதலில் இடம் பிடிப்பார்
தேவனை மறந்துபோன
பாவிகள் எல்லாம்
எரியும்
அக்கினிக்கடலில்
அமிழ்ந்திடுவார்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment