ஞானம்
தேவ ஞானம்
தேவ
பயமே என்றும் ஞானம்
தீமை
நம்மை அகன்றோடி
தினம்
தேடுவது தேவ ஞானம்
1. கர்த்தரே
மகா ஞானமே
ஞானம் யாவருக்கும்
தருபவரே
முன் குறித்து
அழைத்து வந்து
நீதிமானாய்
ஞானம் தருவார்
2. ஞானம் தரும்
அழைப்பு
அதை அடைந்தால்
உன் வாழ்வில் செழிப்பு
தினம் தேடு
அதைப் பாடு
தருவார்
மகிமையின் கிரீடம்
3. ஞானத்தை
மேன்மைப்படுத்து
அது உன்னை
மேன்மையில்
நிறுத்தும்
ஞானத்தை
தழுவி ஏற்றுக்
கொண்டால்
வாழ்வில்
கனமும் பெருவாய்
No comments:
Post a Comment