இயேசு
மானிடனாய்
பிறந்தார்
இந்த
லோகத்தை மீட்டிடவே
இறைவன்
ஒளியாய் இருளில்
உதித்தார்
இந்த நற்செய்தி
சாற்றிடுவோம்
இயேசு
1. மேய்ப்பர்கள்
ராவினிலே
தங்கள்
மந்தையைக்
காத்திருக்க
தூதர்கள்
வானத்திலே தோன்றி
தேவனைத்
துதித்தனரே
- இயேசு
2. ஆலோசனைக்
கர்த்தரே
இவர்
அற்புதமானவரே
விண்
சமாதான பிரபு
சர்வ
வல்லவர் பிறந்தனரே
- இயேசு
3. மாட்டுத்
தொழுவத்திலே
பரன் முன்னணையில்
பிறந்தார்
தாழ்மையைப்
பின்பற்றுவோம்
அவர்
ஏழ்மையின்
பாதையிலே - இயேசு
4. பொன்பொருள்
தூபவர்க்கம்
வெள்ளைப்
போளமும் காணிக்கையே
சாட்சியாய்
கொண்டு சென்றே
வான
சாஸ்திரிகள்
பணிந்தனரே
- இயேசு
5. அன்னாளும்
ஆலயத்தில்
அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே
கூறி
தூயனைப் புகழ்ந்தனரே
- இயேசு
6. யாக்கோபில்
ஓர் நட்சத்ரம்
இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே
நம்மை விண்ணதில்
சேர்த்திடுவார்
- இயேசு
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment