வந்தாரய்யா வந்தாரய்யா என்னைத் தேடி

வந்தாரய்யா வந்தாரய்யா என்னை தேடி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          வந்தாரய்யா வந்தாரய்யா என்னைத் தேடி வந்தார் ஐயா

            தந்தாரய்யா தந்தாரய்யா சொந்த ஜீவனை தந்தரையா - 2

 

                        வந்தாரே தேடி வந்தாரே

                        தந்தாரே சொந்த ஜீவன் தந்தாரே - 2

 

1.         பூமி உண்டாகும் முன்னும்,

            ஆதி முதற் கொண்டும்,

            பிதாவாலே அபிஷேகம் பண்ணப்பட்டார் - 2

            செல்லப் பிள்ளையாக அவரின் மடியிலே

            மனமகிழ்ச்சியாக நித்தம் இருந்ததை

            துறந்து வந்தார் நமக்காய் துறந்து வந்தார் - 2

 

2.         தேவனுடைய ரூபமாக இருந்தும்

            தேவனுக்கு சமமாய் இருப்பதை

            கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் - 2

            தம்மைத் தாமே வெறுமை-யாக்கி

            அடிமை ரூபம் எடுத்து

            சாயலானார் மனுஷ சாயலனார் - 2

 

3.         வானோர் பூதலத்துள்ளோர்,

            பூமியின் கீழானோர் எல்லோர்

            முழங்கால் யாவும் முடங்கும் - 2

            பிதாவின் தேவனுக்கு மகிமையாய்

            இயேசுவே கர்த்தர் என்று நாவுகள்

            அறிக்கை செய்யும் கர்த்தரையே அறிக்கை செய்யும் - 2

 

- Pastor. Paul Kingsly

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு