அழைத்தீரே
ஏசுவே
அன்போடே
என்னை அழைத்தீரே
ஆண்டவர்
சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன்
தேவே
1. என்
ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என்
உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என்
துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
என்
காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே
வந்தேனிதோ - அழைத்தீரே
2. என்னதான்
தீங்கு நான் இழைத்தேன்
என்னை
விட்டோடும் என் ஜனமே
எத்தனை
நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே
உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி
நான் மறப்பேன் - அழைத்தீரே
3. ஆதி
விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர்
அன்பு பொங்கிடவே
ஆதி
அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல்
பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன்
உழைப்பேன் - அழைத்தீரே
4. எந்தன்
ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை
ஜனத்தை மீட்டிடுமே
எந்தன்
பித்த சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
என்
பிரணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும்
ஒப்படைத்தேன் - அழைத்தீரே
5. ஆடம்பரங்கள்
மேட்டிமைகள்
ஆசாபாசங்கள்
பெருகிடுதே
ஆயிரம்
ஆயிரமே நரக வழிபோகின்றாரே
ஆ!
நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே
இரங்கும் - அழைத்தீரே
6. பாக்கியமான
சேவையிதே
பாதம்
பணிந்தே செய்திடுவேன்
ஆயுள்
முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின்
மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை
அடைவேன் - அழைத்தீரே
No comments:
Post a Comment