அழைப்பின்
குரல் கேட்டேன் - என்
ஆண்டவர் என உணர்ந்தேன்
அருகினில் தயங்கி நடை பயின்றேன்
பின்னே வா என முன் சென்றார் - 2
1. அறிவில்
குறைந்தவன் நான் அன்றோ
அதைத்
தெரிந்தும் அழைத்தது
ஏன்
என்றேன்
அறிந்தவர்
செருக்கினை அகற்றிடவே - பின்னே
2. வலிமை குறைந்தவன் நான் அன்றோ
அதைத்
தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
வலியவர்
கொடுக்கினை வதைத்திடவே - பின்னே
3. குறைகள்
நிறைந்தவன் நான் அன்றோ
அதைத்
தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
கருவில்
இருந்துன்னைத் தெரிந்தவன் நான் - பின்னே
No comments:
Post a Comment