மலையடி ஓரத்திலே மாடடையுங் கொட்டிலிலே
(இராகம்: செஞ்சுருட்டி) (தாளம்: ஆதி)
தரு. - ஏசல்.
1. மலையடி
ஓரத்திலே மாட
டையும் கொட்டிலிலே
கானப்
புல் மெத்தையிலே
- இயேசு - காரண ராய்ப் பிறந்தாரே
காரண
ராக இத் தாரணி மீதில்
பூரண
ராகப் பிறந்தாரே
என் சுவாமி
ஆரணம்
பாடி அடிபணிந்
தேத்தித்
தோரணங்
கட்டித் தொழுதிடவே
வாரும்
(தான
தன்னான தன்னன்ன நா
நா)
2. சாட்சியாய்க்
கூறவந்த சர்வ
வல்லவர் தூதன்
மாட்சிமை
யாயுரைத்த
வார்த்தையதைக்
கேட்டுணர்வீர்
நாச்சியார்
கன்னிமரி யம்மாள்
வயிற்றில்
மாட்சிமை
யுள்ளோ மதலையாய் பிறந்தார்
காய்ச்சிய
பாலும் கடையாலுமே
கொண்டு
காட்சி
காணவே கருதினாரே
மேய்ப்பர் - தான
3. வானத்தி
லேயுதித்த
வழி காட்டி வெள்ளி
யதால்
ஞாலத்தின்
சாஸ்திரிகள் நடந்தாரே
காட்சி காண
ஞானத்தி
னாலேகண்ட
சாஸ்திரி
மார்கள்
தானத்தி
லேயுதித்த
தற்பரனைக்
காண
மேனத்தின்
காணிக்கை கொண்
டார்ப்பரித்தே
வந்தார்
தானத்தி
லுள்ள சகோதரரே
வாரும் - தான
4. காசினியி
லுள்ளோர்
செய்த கொடும் பாத
கத்தாலே
மாசில்லா
இயேசு சுவாமி மதலையாய்ப்
பிறந்தாரே
ஆசுள்ள
குற்றம் அதிகமாய்ச்
செய்தோர்
மாசுள்ள
பாவம் சகலமும்
தீர்க்க
காசினியில்
சீவன்விட்
டுயிர்த்தெழுந்து
போன - அத்
தாசனைக்
காணவென்று
ஆர்ப்பரியு
மிப்போ - தான
5. வாரும்
சகோதரரே வல்லவர்
நாளதிலே
சேரும்
சகோதரரே தேவனைப்
போற்றுதற்கு
தேவனைப்
போற்றுதற்கு
சீக்கிரமே வாரும்
காவனத்தில்
தின்ற கனியின்
பாவம் போக்க
பூவனத்தில்
வந்த அந்தப் புண்ணியரின்
வார்த்தை - இத்
தாசனத்தி
லுள்ளோர்க்கு
சமாதான வார்த்தை
- தான
Comments
Post a Comment