24 March 2026

ஆதியாம் மகாராசனே எந்த வேளையும்

ஞா.கீ:235

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

235. இராகம்: புன்னாகவராளி                                               அடதாளம்

 

                             பல்லவி

 

          ஆதியாம் மகா ராஜனே,-எந்த வேளையும்

            அடிய னோடிரும், ஈசனே

 

                             அனுபல்லவி

 

            தீதில்லா சருவேசா, தேசுறும்[1] பிரகாசா,

            பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால், - ஆதி

 

                             சரணங்கள்

 

1.         பாவி பெலனால், ஐயனே,-நின்றால் என்னைப்

            பகைவர் ஜெயிப்பார், மெய்யனே;

            தேவா, துணை நீர் ஐயனே;-சிறியனிடம்

            சேர்ந்தே வசியும், துய்யனே[2],

            மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும், காவலன் நீரே;

            சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும். - ஆதி

 

2.         இரக்கம் பொழிய வாருமே,-கிருபையாக,

            இறைவா, என்னிடம் சேருமே;

            உருக்கம் நிறைந்த நீருமே;-அனவரதம்[3]

            உந்தம் அருளைத் தாருமே;

            செருக்காய் எம் மீதி கலோர்[4] சேதம் செய்ய நினைக்கும்

            திருக்கை[5] அகற்றி என்னில் தினமும் அருள்புரியும். - ஆதி

 

3.         என்தன் மரண மட்டுமே-அருகில் நீரே

            இருந்தால் மகா இஷ்டமே

            எந்த அகிதர்[6] கெட்டுமே-இமைப்பொழுதில்

            ஏகிப் போவார் திட்டமே;

            தந்தை சுதன் நீரல்லால் தஞ்சம் வேறாரும் இல்லை;

            விந்தைமேவும் கதியில் மேன்மையுடன் வாழ்கவே! - ஆதி

 

 

- ச. யோசேப்பு



[1] ஒளி

[2] தூயவரே

[3] தினந்தோறும்

[4] பகைவர்

[5] வஞ்சகம்

[6] தீயர்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...