Posts

Showing posts from September, 2024

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் மேலும் அதிக பாடல்களுக்கு                       நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்             கருத்தோடு நன்றி சொல்கிறேன் - 2             என் தாயின் கருவில் நான் உருவான நாள்முதல்             நாள்தோறும் காத்து வந்தீரே             என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்             நாள்தோறும் காத்து வந்தீரே - 2                           நன்றி நன்றிபலி செலுத்தியே                         நாதன் இயேசுவையே பாடுவேன்                         கோடி நன்றிபலி செலுத்தியே                         ஜீவன் தந்தவரை பாடுவேன் - 2   1.          பாவியாக நான் வாழ்ந்து             பாவம் செய்த நாட்களிலும்             நாள்தோறும் காத்து வந்தீரே             நான் உம்மைவிட்டு தூரம் சென்று             துரோகம் செய்த நாட்களிலும்             நாள்தோறும் காத்து வந்தீரே - 2   2.          நான் திக்கற்று துணையின்றி             திகைத்திட்ட நேரத்தில்             துணையாக தேடி வந்தீரே             நான் துக்கத்தால் மனம்நொ

இந்நாள் வரையில் காத்த உன் கருணைக்கு

இந்நாள் வரையில் காத்த உன் கருணைக்கு மேலும் அதிக பாடல்களுக்கு                                இந்நாள் வரையில் காத்த உன் கருணைக்கு                         நன்றி என் இறைவா                         இனி வரும் நாளும் இந்நாளாக                         இரங்கி அருள் புரிவாய்                         இறைவா இரங்கி அருள் புரிவாய் - 2   1.          தாயின் கருவில் தரிக்கும் முன்னே             நீயும் என்னை நினைத்தாய் அழைத்தாய் - 2             தனது குழந்தையை தாயே மறப்பினும் - (2)             மறவாதென்னை மகிழ்ந்து காக்கின்றாய் - (2) - இந்நாள்   2.          என்னென்ன திறமைகள் எனக்கு தந்துள்ளாய்             படைப்பு அனைத்தும் பணிய பணித்தாய் - 2             ஒவ்வொரு நாளுமே நீ தரும் பிச்சை தான் - (2)             உணர்ந்து வாழவே உதவி செய்யுவாய் - (2)     YouTube Link             கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்