06 August 2024

நரனாம் எளியேன் நற்கதி சேர

நரனாம் எளியேன் நற்கதி சேர

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

86. இராகம்: சகான                        ஆதிதாளம்

 

                             திபதை-கண்ணிகள்

 

1.       நரனாம்[1] எளியேன் நற்கதி சேர,

            பரனே, உன் அருள் செய், என் பவவினை தீர.

 

2.         தரணியோர்க் காக நரர் உருத் தரித்தாய்;

            தகு நெறி விளக் கிட மிகவும் சஞ்சரித்தாய்.

 

3.         இக பரம் அனைத்தும் வகையுடன் படைத்தாய்

            எளியோர்க்கென்றாவின் கொட்டில் வழிவரத் தொடுத்தாய்.

 

4.         பாவிகள் உயிர்த்து ஜீவனைக் கூட,

            பரிவுடன் பாடடைந்தீர், திரு ரத்தம் ஓட.

 

5.         இந்நிலத் தவர்க்காய் நல்நெறி முடிக்க,

            இழிமரத்[2] தறையுண்டீ எழில் உடல் துடிக்க.

 

6.         பாதகன் ஒருவன் தீதுணர்ந் துருக

            பரதீசில் அமைத்தீரே, அருள் மிகப் பெருக.

 

7.         மரணத்தின் கூர்போய் நரர் என்றும் நேரே,

            வாழ்ந்து பரத்துறவே ஆழ்ந்துயிர்த்[3] தீரே.

 

- ஜா.பா

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] மானிடர்

[2] சிலுவை

[3] பாதாளம் சென்று

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...