கன்னி மரியின் மடிதனில் மகிழ்ந்தாடும்

கன்னி மரியின் மடிதனில் மகிழ்ந்தாடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கன்னி மரியின் மடிதனில்

                   மகிழ்ந்தாடும் மன்னவன்

                        தூதர்கள் துதித்திடும் தேவாதி தேவன்

                        தொழுவத்தில் வந்துதித்தார்

 

                        ஆரிராரோ ஆராரிரோ - (4)

 

 1.        பயப்படாதே என்றுரைத்த பார்போற்றும் பரிசுத்தரே

            கலங்கிடாதே என்றுரைத்த கர்த்தாதி கர்த்தரே

            திகையாதே என்றுரைத்த திரியேக தேவனே

            சத்துருவை சங்கரிக்கும் லோக மீட்பரே

 

 2.        அடிமை வாழ்வை அழிக்கவந்த அற்புத பாலகனே

            அருளின் ஒளியாய் இருளை நீக்கும் நேச தீபமே

            தரணியை மீட்க வந்த சீரேசு நாதனே

            தொல்லை கஷ்டம் நீக்க வந்த தேவ மைந்தனே

 

3.         மாசில்லாத மைந்தனுக்கோ மாணிக்க தொட்டிலில்லை

            மாடடையும் கொட்டினிலே மாமன்னன் உதித்தாரே

            பாவியை இரட்சிக்கவே பரலோகம் விட்டிறங்கி

            பாவம் சாபம் நீக்கிடவே பாரில் உதித்தார்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு