என்
தேவன் எனக்கு அடைக்கலம்
அவர்
செட்டைதான்
எனது புகலிடம்
என்றென்றும்
என்னை நடத்துவார்
அவர்
கரத்தில் என்னை
தாங்குவார்
1. குயவனின்
கையில் களிமண்ணைப்போல்
நித்தமும்
என்னை வனைந்திடுவார்
மன்னான
என்னை மறுரூபமாக்கி
மகிமையின்
சாயலாய் மாற்றிடுவார்
- என்றென்றும்
என்னை
2. ஆபத்து
காலத்தில் அவரை
நோக்கி
கூப்பிட
எனக்கு பதில் கொடுப்பார்
சாத்தானின்
கைக்கு தப்புவித்து
என்னை இரட்சிப்பின்
பாதையில் நடத்துவார்
- என்றென்றும்என்னை
3. நான் நடக்க
வேண்டிய வழிகளை
காட்டி
அவரே என்னை
நடத்திடுவார்
என்னை முற்றிலும்
பரிசுத்தமாக்கி
பரலோக இராஜ்ஜியம்
சேர்த்திடுவார்
- என்றென்றும்
என்னை
- சகோ. டேனியல்ராஜ்,
HFDM Gods Word
No comments:
Post a Comment