ஆதாமின் பாவத்தாலே அரூபன்

ஆதாமின் பாவத்தாலே அரூபன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

49. இராகம்: சங்கராபரணம்                       ஆதிதாளம்

 

                             பல்லவி

 

                   ஆதாமின் பாவத்தாலே அரூபன் உருபமான

                   அதிசயம் இதோ! பாரும்.

 

                             அனுபல்லவி

 

            மாதேவை புத்திர ரான மானிடர் குழாங்களே, நீர்

            வல்லமைப் பிதாவின் ஒரு மைந்தனைச் சந்திக்க வாரும் - ஆதா

 

                             சரணங்கள்

 

1.         ஆதி பிதாவின் கிரு பாசனத்தைத் துறந்தார்;

            அழகான மோட்ச செல்வ பாக்கியத்தை மறந்தார்

            பாதகந் தீரவேண்டிப் பெத்தலையில் சிறந்தார்;

            பராபர வஸ்து வானோர் பாலனாகப் பிறந்தார் - ஆதா

 

2.         உன்னத வஸ்து வானோர் உலகத்தை நேசித்தார்;

            ஒப்பில்லா தேவ தேவன் மனுஷரை ஆசித்தார்;

            தன் ஒளிவை விளங்க, தானே பிரகாசித்தார்;

            ஜாதிகளுக்குத் தயவாய்; உபதேசித்தார் - ஆதா

 

3.         மந்தை ஆயர் சந்திக்க, சந்தோடமே விண்டார்,

            வான நாட்டைப் பிரிந்து மாட்டுக் கொட்டிலைக் கண்டார்

            விந்தை திருமுதலார்க் கந்தைத் துணியைக் கொண்டார்

            வேத காரணர் தானே மேவி தாயின் பால் உண்டார் - ஆதா

 

- வேதநாயக சாஸ்திரியார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு