கல்வாரி குருசில் கர்த்தாவின் மரணம்

கல்வாரி குருசில் கர்த்தாவின் மரணம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கல்வாரி குருசில் கர்த்தாவின் மரணம்

                        கண்டாலே போதும் கல் மனம் உருகும்

                        கண்ணீருடன் நோக்கி விண்ணப்பம் செய்திட

                        கண்களை ஏறெடுப்பேன்

                        கண்களை ஏறெடுப்பேன் இயேசுவே

 

1.         இயேசுவின் அன்பிதோ

            என்றென்றும் மாறாதே

            எத்தனை துன்பங்கள் என்னை சூழ்ந்திட்டாலும்

            எப்போதும் இயேசுவின் சிலுவை என் தஞ்சம்

            என்னோடிருப்பார் இயேசு என்னைக் காப்பார்

 

2.         நோய்க்கொண்டு தேகத்தில்

            அவதி நான் பட்டாலும்

            நான் நம்பும் ஆண்டவர்

            என்னைக் கைவிடாரே

            பெலவீனம் நோய்களையும் எனக்காய் சுமந்தார்

            பார்ப்பேன் சிலுவை மீட்பை பெறுவேன்

 

3.         என் சித்தம் அல்லவே

            ஒருபோதும் வேண்டாமே

            உம் சித்தம் மட்டுமே

            நடந்தேற வேண்டும்

            கர்த்தரின் வீட்டில் நான் களிகூர்ந்து பாடி

            நித்தம் நிலைத்து நீடுழி வாழ்வேன்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு