தம்புரானே இயேசுநாதா
279.
கண்ணிகள்
1. தம்புரானே
இயேசுநாதா பொன்னுகாந்தா
- எந்தன்
சங்கடங்க
ளென்றழியுஞ்
சொல்ல வேணும்
2. கட்ட நட்ட
மக்கட்குண்டென்றப்பன்
சொன்னது - போல்
அட்ட திக்குந்
தினந்தினங்
கண்டு கொண்டோம்
3. தாயிழந்த
கோழிக்குஞ்சின்
தன்மை போன்றோம்
- நாதா
பாரிலெங்கள்
சங்கடங்கள்
பார்க்க வேணும்
4. சாடிப்பயந்
தோடுமானின்
குட்டி போல - நாங்கள்
காடுமலை
குன்றிலேறி
ஓடுகின்றோம்
5. கூடிழந்த
கோழிபோல்
திகிலடைந்து
- நாங்கள்
வாடி நொந்து
மாற்றார்நடு
வாழுகின்றோம்
6. நூறுநூறாய்
சூழ்ந்துநின்று
ஊறு செய்யும்
- பகை
நாசமெண்ணில்
காவலர்பொன்
னேசு மாத்ரம்.
7. ஆழிதனில்
வீழ்ந்தமிழும்
பட்சி போல - நாங்கள்
வீழ்கின்றோமே
சிற்றின்பமாம்
செங்கடலில்
8. ஆகாரின்பு
தல்வன் போல்இப் பாழ்வ னத்தில்
- நாளும்
காதலனே
வாழவோ யாம் கண்ணீர்
சிந்தி?
9. இன்பமெனும்
பரதிசில்
சென்று வாழ - எங்கள்
துன்பமிந்த
மேதினியி
லென்று மாறும்?
10. சொர்க்கசீயோன்
நகரத்தில் நாத ரோடு
- விரைவில்
சேர்ந்துவாழும்
நித்தியபாக்யம்
நல்கிடுமே
Comments
Post a Comment