தள்ளப்பட்ட கல் நான்
தள்ளப்பட்ட
கல் நான், தடுமாறும்
நிலை தான் - 2
தாங்கிடும்
தெய்வமும் நீர்தானையா
- 2
தப்புவிக்கும்
துணையே வாருமையா
- 2
1. ஆகாதவன்
போல நானும் மாறிவிட்டேனோ
அடுப்பினடியில்
கிடக்கும் பதர் சாம்பலானேனோ
ஆற்றித்
தேற்றி அரவணைக்க
எவருமில்லையோ
அன்பு காட்ட
நாதி இல்லா தனி
மரந்தானோ
- 2
2. இகத்தில்
வாழும் வாழ்க்கையினில்
வாசமில்லையோ
இடுக்கன்
செய்யும் மனிதர்களால்
மோசம் போனேனோ
இன்னல்
துன்பம் தாக்கும்
போது கலங்குகின்றேனே
இதய பாரம்
புரிந்து கொள்ள
ஆட்களில்லையே
- 2
3. உலக வாழ்வின்
உறவு எல்லாம் வேஷமாகுதோ
உற்றார்
சுற்றார்
பாசமெல்லாம்
போலி ஆனதோ
உள்ளம்
உடைய பேசுவதால்
தூக்கம் தொலைந்ததே
உண்மை அன்பை
காட்டிடும்
காலம் வராதோ
- 2
4. எத்தனையோ
வித பயங்கரங்கள்
சூழ்ந்து கொண்டதே
எண்ணம்
விருப்பம் ஏக்கமெல்லாம்
நொறுங்கிப்
போகுதே
எஜமான்
உம்மையே நோக்கி
பார்ப்பேனே
என்னை விட்டு
எடுபடாத நல்ல
பங்கு நீரே - 2
- சகோ. பழனி S. சாமுவேல்
Comments
Post a Comment