31 March 2026

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா

                   என் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ

                        உலக நேசங்கள் ஈடாகுமா

                        என் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ

 

1.         அன்பின் அக்கினி பற்றியெரியுதே

            உள்ளமெல்லாம் உம்மை நாடித் தேடுதே

            தண்ணீர்கள் தணிப்பதில்லையே

            நேசரே உந்தன் அன்பினை

 

2.         திராட்சை ரசத்திலும் உம் நேசம் பெரியது

            உந்தன் நாமமோ இனிமையானது

            ருசித்து விட்டேன் உந்தன் அன்பினை

            அறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை

 

3.         தாயும் நீரே தந்தையும் நீரே

            சொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே

            ஆத்ம நேசர் எந்தன் நேசரே

            ஆயுளெல்லாம் போதும் நீரே

 

4.         வெண்மையானவர் நீர் ரூபமுள்ளவர்

            இன்பமானவர் நீர் மதுரமானவர்

            உன்னத பாடல் உமக்குத்தானய்யா

            அன்பரே எந்தன் இயேசய்யா

ஆனந்தம் பொங்கி வழியுதே

நிஜீ.கீதங்கள்:2469

To Download Txt Lyrics file

 

          ஆனந்தம் பொங்கி வழியுதே

            அல்லேலூயா துதி பாடுகையில்

            வானம் திறந்து இறங்கிடுதே

            வல்ல ஆவி எந்தன் உள்ளத்திலே

 

                        போற்றுவோம் புகழ்வோம் தேவனே

                        சாற்றுவோம் சரணம் ராஜனை

 

1.         பரலோக ராஜாதி ராஜனை

            பாவ பரிகார தேவனை

            பரிசுத்த அன்பு ராஜனை

             பரவசமாகவே துதிப்போமே

 

2.         பாவமில்லா இரத்தம் சிந்தினாரே

            பாவ பரிகாரி ஆனாரே

            சாப ரோகம் நீக்கினாரே

            சந்தோஷம் சமாதானம் அருளினாரே

 

3.         எண்ணம் வார்த்தை ஆகு முன்னே

            சிந்தை செயலாய் மாறு முன்னே

            திண்ணமாய் எனக்கு செய்திடும்

            தெய்வத்தைப் போற்றி புகழ்வோமே

 

4.         ஏவல் செய் தூதர்கள் காத்திருக்க

            ஏன் அதற்காய் அஞ்ச வேண்டும்

            காவல் செய் கணங்கள் சூழ்ந்திருக்க

            களிப்போம் களிப்போம் களித்திடுவோம்

ஆனந்தம் ஆனந்தம் பேரின்பம் பேரின்பம்

நிஜீ.கீதங்கள்:1847

To Download Txt Lyrics file

 

          ஆனந்தம் ஆனந்தம் பேரின்பம் பேரின்பம்

          இரட்சிப்பின் ஆனந்தம் நித்தம் என் சங்கீதம்

           

                        கர்த்தாதி கர்த்தன் ராஜாதி ராஜன்

                        என்னை மீட்டதால்

 

1.         உளையான சேற்றில் உழன்றிருந்தேனே

            கனிவுடன் தூக்கினார் கன்மலையில் நிறுத்தினார்

            துதிக்கவே புதுபாடலால்

            நாவினை நிரப்பினார் நன்றி சொல்லுவேன்

 

2.         எரிகோவின் வீதியில் என்னை இயேசு கண்டார்

            காயங்கள் கழுவினார் பாவங்கள் போக்கினார்

            பாடுவேன் இனி நாளெல்லாம்

            ஓடுவேன் அவர் அன்பை எங்கும் கூறிட

 

3.         வான லோக ராஜா வரும் நாளில் நானும்

            பறந்தே செல்லுவேன் பாதியில் வானத்தில்

            பாடுகள் என் பாரங்கள் யாவுமே

            மாயமாய் மறைந்தே போகுமே

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...