துதியில் வாழ்பவரே துதிக்குப் பாத்திரரே

துதியில் வாழ்பவரே துதிக்குப் பாத்திரரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          துதியில் வாழ்பவரே துதிக்குப் பாத்திரரே

          எனக்குள் வாழ்பவரே எந்தன் நல்மேய்ப்பரே

 

                        ஆராதனை வல்லமை மாட்சிமை

 

1.         ஆயுள் உள்ளவரை ஆராதிப்பேன்

            ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

            சபையின் நடுவிலும் ஆராதிப்பேன்

            சர்வ வல்லவர் நீர்தானய்யா

 

2.         கோடான கோடி பரிசுத்தர்கள்

            பாடல்கள் பாடி பணிகின்றனர்

            வானாதி வானங்களும் போற்றும் உம்மை

            அல்பா ஒமேகா நீர்தானய்யா

 

3.         வெள்ளை சிங்காசனம் அமர்ந்தவரே

            தூதர்கள் நடுவில் ஜொலிப்பவரே

            அக்கினி ஆவியால் நிரப்புகின்ற

            அபிஷேக நாதரும் நீர்தானய்யா

 

4.         துதியும் கனமும் மகிமை எல்லாம்

            தூயவர் உமக்கே செலுத்துகிறோம்

            ராஜாதி ராஜாக்களும் நடுங்குகின்ற

            அதிகாரம் வல்லமை நீர்தானய்யா

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே