நன்றி சொல்லி நன்றி சொல்லி துதிக்கிறோம்

நன்றி சொல்லி நன்றி சொல்லி துதிக்கிறோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                    நன்றி சொல்லி நன்றி சொல்லி துதிக்கிறோம்

                        நாதனே உம் நன்மைகளை நினைக்கிறோம் - 2

                        குழியின் அடியில் கிடந்த என்னை தூக்கினீரே (2)

                        கன்மலையின் சிகரத்திலே நிறுத்தினீரே (2)

 

1.         நீங்க நன்மை செய்ததால் நான் நன்றி சொல்கிறேன்

            கண்மணி போல் காத்ததினால் துதித்துப் பாடுவேன் - 2

            என் கால்கள் சறுக்கி விழும்போதும் தாங்கி நின்றவரே (2)

            நான் குழியில் விழுந்த போதும் என்னை தூக்கி விட்டீரே (2)

            நீங்க செய்த நன்மை நினைக்கும் போது இதயம் கனக்குது

            உம்மை துதித்து புகழ்ந்து பாடுவதால் இதயம் இனிக்குது - 2 - நன்றி

 

2.         உம்முன் எம்மாத்திரம் நான் என் மேல் தயவு வைத்திரே

            சிறுமையான என்னையும் நினைவு கூர்ந்தீரே - 2

            ராஜாக்களின் முன்பாகவும் அமர செய்தீரே (2)

            அழுக்கான என்னையும் அழகாய் பார்த்தீரே (2)

            உங்க அன்பு கிருபை இரக்கம் தயவு என்றுமுள்ளது

            உம்மை நித்தம் துதித்து பாடுவதால் ஜீவன் வாழுது (2) - நன்றி

 

- G. Aaron Raja

 

 

https://www.youtube.com/watch?v=JKvPYXHaMxs

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு