தேவாதி
தேவன் சிலுவையிலே
எனக்காய்
இரத்தம் சிந்தினாரே
பாவி என்
பாவத்தை மன்னிக்கவே
தந்தார்
தன் ஜீவனையே
அனுபல்லவி
எந்தன்
பாவம் யாவும் நீங்கிற்றே
எந்தன்
சாபம் யாவும் ஓடிற்றே
மாந்தர்
யாரும் செய்யா
தியாகத்தை
எனக்காய்
செய்தார் கிறிஸ்துவே
சரணங்கள்
1. பாவத்தின்
சம்பளம் மரணம்
என்றே
கலங்கி
நான் நின்ற வேளையில்
திகையாதே
மகனே என் கிருபை
வரம் உன்னை
மீட்கும் என்றாரே
2. பாதைகள்
எங்கும் தடை கற்களால்
முடிந்தது
என்று நினைத்தேன்
உனக்கான
வழிகளைத்
திறந்திடுவேன்
பிரகாசிப்பாய்
நீயும் என்றாரே
- P. ANISH BABU
https://www.youtube.com/watch?v=BfhmpJ4O-KI
No comments:
Post a Comment