ஆராய்ந்து முடியாத பெரும்
காரியங்கள் செய்தவரே
எண்ணி எண்ணி முடியாத பல
நன்மைகளை செய்தவரே
நன்றி நன்றி நன்றி உமக்கே
- இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி உமக்கே
1. நான் பிறந்த நாள் முதலாய்
ஆதரித்து வந்தவரே (2)
குறைவு பட்ட நாட்களிலே - நான் (2)
என் குறைகளெல்லாம் தீர்த்தவரே (2)
2. தாழ்மையிலே வாழ்ந்த என்னை
தயவு வைத்து நினைத்தவரே (2)
சிறுமைப்பட்ட நாட்களிலே - நான் (2)
என் சிறையிருப்பை மாற்றினீரே (2)
3. சீரழிந்த தேசத்திலே - என்னை
சீர்படுத்தி உயர்த்தினீரே (2)
துயரப்பட்ட நாட்களிலே - நான் (2)
உம் துதிகளினால் நிரப்பினீரே (2)
- Pastor. P. Raju
No comments:
Post a Comment