முத்து முதலூர் உன்னத ஆலய
முத்து
முதலூர் உன்னத
ஆலயம்
பாடியவர்
: திரு. ஈ. குருபாதம்
எடுத்தியம்பியவர்:
திரு. கு. ஈசாக்கு
1. முத்து
முதலூர் உன்னத
ஆலய
அலங்கார
வேலையைப்பார்
- அதில்
முத்துப் போல்
நீலக் கண்ணாடி
வகையுடன்
ஆல்டரின்
தன்னழகும்
2. அந்த உன்னத
ஆலய நீளத்தின்
தன் அடி நூற்று
ஐம்பத்தொன்று
- அதில்
தென்வட
லோடியே ஐம்பத்திரெண்டடி
அத்தனின்
ஆலயமும்.
3. ஈராறு
தூண்கள் ஏந்தும்
ஆழாங்கல்
ஐம்பத்தெட்டு
உண்டு-அதில்
ஈராறு
மாராப்பு
உத்திரமுடனே
மதலைக்கை
ஐம்பத்தாறு.
4. அந்த மல்லுக்கை
நூற்று ஐம்பத்திரெண்டு
உத்திரங்கள்
நான்கு - அதில்
தாழ்வாரக்கை
நூற்று முப்பத்தாறு
கொடி உத்திரம்
ஏழு
5. இந்த ஆகாய மண்டல
வாய்வதை உட்கொள்ள
ஈரிரண்டு
கதவுகளும் - இன்னும்
பிரதான வாசலும்
பெரிய கதவொன்றும்
அழகாக இலங்குவது
பார்?
6. அங்கு தென்றல்
அடித்து நறுமணம்
வீரிட
ஜன்னல்கள்
பத்தொன்பது - அதில்
அச்சரம்
உரைத்தார் லூக்கா
சுவிசேஷம்
இரண்டு பதினான்கு.
7. அந்த மெஞ்ஞான
தீட்சையின்
அலங்காரத்
தொட்டியின்
சிங்கார வேலையைப்
பார் - அங்கே
பரிசுத்த ஆவி
புறா ரூபம் ஆனதும்
தேவாட்டுக்
குட்டியுண்டு
8. அதில் கொத்துக்
கொத்தாய்ப்
பல முத்து முத்தாய்ச்
சில
சித்திர
வேலையுண்டு-
அதைச்
சுற்றியே
ஈராறு வர்ணப்பளிங்குகள்
முத்துப்போல்
மின்னுது
பார்
9. சுற்றிவர
தெங்கு சோலை
கோட்டைக்குள்
தோப்பும்
- அதில்
சங்கை ரெவரன்ட்
ஜி.பி. ஞானமணி
மேன்மை குணமும்
10. குருபாதம்
எண்ணியே பார்த்தார்
தென்னை மரங்கள்
ஐம்பத்தெட்டு
- அதில்
சிங்காரச்
சோலை அரளி
வகையுண்டு
மாமரச்
சோலையுண்டு
11. எனக்குக் களியல்
முறைதனைக்
கற்றுக்
கொடுத்தவர் நோவா
அண்ணாவி - அவர்
பாதம் பணிந்து
கவிதனைப்
பாடினேன்
பாலன் குருபாதம்
Comments
Post a Comment