மிகையாகத் தூஷணித்துச்
97. இராகம்:
மோகனம் ரூபகதாளம்
(407)
தரு
1. மிகையாகத்
தூஷணித்துச்
சகலாத்து மேல்
சட்டை ஒன்றிட்டு-யூதர்
வேந்தன்
எனச் சேவகர்தாம்
காய்ந் திசைத்த கோரணியென்?
தேவே
2. பகைகாரப் பாவிகளைத்
தொகையாக
வானுலகில் சேர்த்து-அங்கே
பார்த்திபராய்ச்
சமுகத்தினில்
ஏற்றிவைக்க
வேண்டி அன்றோ மாதே?
3. முள்ளின் ஒரு
முடி சமைத்து,
வள்ளல்
உம்தன் சிரத்தழுத்தி
வைத்தே-கஞு
மூங்கில்
தடியால் அடிக்க
ஓங்கு துயர்
அடைந்தீரோ?
கோவே?
4. தெள்ளி முகம்
மினுக்கி,
மிகச்
சிரத்தை
அலங்கரித்துக்
கந்தை தீர்த்து
- நித்ய
ஜீவன்
முடி உன் தலையில்
ஓவியமாய்ச்
சூட்ட அன்றோ மாதே?
5. நன்னயஞ் சேர்
என்னுத்ம
நாயகமே, மெய்க்கிறிஸ்து
வேந்தே-நீர்
செய்
நன்றி
குன்றாதே
ஒழுக
என்றும்
எனக்கருள்
புரியும் - தேவே
6. கன்னியரே,
சீயோனின்
மின்னரசே, ஞானமடமானே,
உன்னைக்
காத்தருள்வோம்,
மணவீடு
சேர்த்தருள்வோம்,
கலங்காதே மாதே.
- வே.சா
Comments
Post a Comment