மனமே ஓ உன்னதம் மறை தந்தவனே
67. இராகம்: காம்போதி ரூபகதாளம்
(397)
பல்லவி
மனமே,
ஓ! உன்னதம்,
மறை தந்தவனே
வந்தனர்
அனுபல்லவி
கன மிகுந்த
திருக்குமாரன்
கருணையாய்
நரர் உருவமாகினர்
- மன
சரணங்கள்
1. ஆதி சர்ப்பத்தின்
தலையை உடைக்க,
அகிலத்தின்
பவமனைத்தும்
துடைக்க;
வேத மறையி னூடு
சிறந்த மேசியா
பிறந்தார் - மன
2. ஆ! கனமிகு
மகிமைத் தேவனார்
யாவருக்கும்
அருள் செய்ய மேவினார்;
ஏக முதல்வனாம்
ஒரு வஸ்து ஏசு
ராஜ கிறிஸ்து
- மன
3. நானிலத்தில்
நரர்[1] பிழைக்கவே,
ஞான நன்மைகளே தழைக்கவே,
வான ராச்சியம்
சேர்ந்து வந்தது:
மானுவேல்
பிறந்தார் - மன
4. நாம் நடத்தியபடி
செய்யாமல்,
நம்முடமேல்
உக்கிரம் வையாமல்;
ஆ! மகத்துவமே
கதித்த அனாதியார்
உதித்தார் - மன
- வே.சா
Comments
Post a Comment