மன்னிப்புத் தாருமையா என் மணவாளனே
மன்னிப்புத்
தாருமையா என் மணவாளனே
எனக்குள்
வாருமையா என் எஜமானனே
- 2
மணவாளனே
மணவாளனே
எஜமானனே
என் இயேசு ராஜனே
- 2 - மன்னிப்புத்
1. பாவ வாழ்வை
வெறுக்கின்றேனையா
உம் பாதம்
காணத் துடிக்கின்றேனையா
- 2
என் ஆண்டவரே
என் சிருஷ்டிகரே
பாவம் போக்கப் பலியானீரே
- 2
என் ஆண்டவரே
என் சிருஷ்டிகரே
உந்தன்
பாதம் சரணமைய்யா
(நான்) - (2) - மணவாளனே
2. எந்தன்
மனதில் ஆறுதல்
இல்லை
என்னை அழைத்தவரே
ஆற்றிடுமையா
- 2
என் ஆறுதலே
என் ஆண்டவரே
யாரிடத்தில்
போவேனையா
என் ஆறுதலே
என் ஆண்டவரே
உம்மிடந்தான்
சொல்வேனையா
(நான்) - (2) - மணவாளனே
3. உடைந்த
உள்ளத்தோடு வருகின்றேன்
புது ஆவியால்
நிரப்பிடுமைய்யா
- 2
என் புகலிடமே
என் புது பெலனே
உந்தன்
சாயலாக மாற்றுமே
என் புகலிடமே
என் புது பெலனே
உந்தன்
மார்பில் சாய்ந்திடுவேன்
(நான்) - (2) - மணவாளனே
- Pr. Chandra Sekaran
Comments
Post a Comment